Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Monday, September 15, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

கவிதையாய் 3 காட்சிகள் விரியவும், " a FILM WITHOUT A STORY" என்ற tag லைனின் Mis-Guiding யினாலும், விகடன் சிறுகவிதைகள் போல் படம் நெடுக இருக்குமோ என்ற நற்பசையில் நிமிர்ந்து உட்கார்ந்தால், இதுவும் Just another "under dog" story , only with Parthiban's touch. IMPRESS ME NEXTIME, MR.PARTHIBAN.

Monday, September 01, 2014

வேலையில்லா பட்டதாரி

Velaiyilla Pattathari


A Feel Good 'for masses' Movie, full of cliche moments...
(finally a feel good movie for my kind)

Monday, June 09, 2014

Irandam ulagam இரண்டாம் உலகம்

Happened to watch #irandamulagam, with very low expectations after umpteen negative feedbacks online and from friends. While watching, I was waiting for the film to fail miserably; expecting the screenplay never to move on and so.. But what was revealed on screen was a drama no less than any of the so called World cinema. #selvaragavan is well ahead of our times for sure. For all those critics who snub him, i know how you would have marveled #Avatar and #Inception, for the reason none other than it being conceived by a Westerner. Now, go see #irandamulagam for yourself on large screen, which is way better than Avatar in EQ.

Psychological reason behind the failure of #irandamulagam and success of #Avatar is: When a westerner / foreigner presents you with a new thought you feel,” probably he is more intelligent than me, hence i don’t understand it, let me not reveal my ignorance, let me praise him as the rest of the world does” is the outcome.
When a fellow Tamilian / Indian presents you with a thought which may be more intelligent than a westerners, you think “how could anyone from here be any different from me or think so intelligently or better the foreigners, it can only be a half baked thought, and it is righteous for me to argue that his thought is wrong “

Except for the quality of graphics, I see #irandamulagam is no less than an #Avatar or #Inception, and waiting for #selvaragavan’s best.

Thursday, April 10, 2014

மான் கராத்தே



செம காமடி.... ஆனா காமடியன்ஸ் ரெண்டரை மணிநேரம் உட்காந்து படம் பாத்த நம்ம தான்...

Tuesday, March 04, 2014

உலக சினிமா ரசிப்பவன் வெகுஜன விரோதியா?

செல்வராகவனின் இரண்டாம் உலகம் பார்த்தேன். நிஜமாகவே ரசித்தேன். இதை சொன்னதற்கு ஆபீசில் கூடி கூடி சிரித்தார்கள். 

சிலர் மனதில் Franz Kafka/நாஞ்சில் நாடன் படிபவர்கள் ஏதோ வெகுஜன விரோதிகள் போல தோன்றுவதுண்டு..

ஒரு "metamorphosis" படிக்கும் முன் பத்து "Sidney Sheldon" தலையை வருத்திக்கொள்ளாமல்  படித்துவிடலாம் தான்.  "Sidney Sheldon" 10 கதையும் நல்ல டைம் பாஸ் தான், ஆனாலும் நம் மனதில் தங்கும் ஒரு விஷயம் வார்த்தை ஜாலங்களோ, action/suspense sequence களோ அல்ல, மாறாக  "metamorphosis" போல ஒரு நாவலில் அது நம் மனதில் விதைக்கும் எண்ணங்களே நம்மை நமக்கே அடையாளம் காட்டும் கண்ணாடியாக இருக்க கூடும். "Ayan Rand இன் The Fountain headம் ", Margaret Mitchell இன் Gone with the Windம் " என் வாழ்கையில் மிக முக்கியமான மாற்றங்களை, வாழ்வின் போக்கை மாற்றிய, மற்றவர்களை குறிப்பாக பெண்களை பார்க்கும் கண்ணோட்ட தையே மாற்றியது. இப்புத்தகத்தை படிக்காவிட்டால் நான் நாசமாகி போயிருப்பேன் என்று கூறவில்லை ஆனாலும் என் இயல்பு கண்டிப்பாக மாற்றம் கண்டுள்ளது. 

எனக்கும் ஒரு ஞாயிறு evening Singam2 பார்க்கவே விருப்பம், ஆனால் அபூர்வமாக வீட்டில் யாரும் இல்லா ஒரு மௌனமான மதியத்தில் DVD இல்  "A street car named Desire" பார்க்கும் அனுபவம், கண்டிப்பாக பொழுது போக்கு அல்ல, வாழ்வியலின் பக்கங்களை புரட்டி பார்க்கும் ஒரு தருணம். 

(Ps : எத்தனையோ படங்களும்/கதைகளும் இருக்க குறிப்பாக  The Fountain headGone with the Wind, A street car named Desire கூற காரணம் என்னுள் பிரதானமாக ஏற்பட பெண்களை பார்க்கும் கண்ணோட்ட தையே மாற்றிய புத்தகம்/படம் இவை யாகும். )

மகன் முன் சைக்கில் திருடி மாட்டிக்கொள்ளும் தந்தையின் உணர்வுகள், 
தங்கைக்காக ஓட்டபந்தயத்தில் 2ம் இடம் பிடிக்க ஓடும் அண்ணனின் உணர்வுகள், 
தனது ஏழ்மையான பால்யத்தின் skateboardஐ மரணிக்கும் பொழுது நினைத்துகொள்ளும் கோடீஸ்வரரின் உணர்வுகள், என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் எத்தனையோ. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவன் நல்லவன் அல்ல, அது போல தருணங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் தான் நாம் நல்லவனா என்பதை நமக்கே உணர்த்தும் பொழுதுகள். ஒரு சிறு கணநேர முடிவுகள் நம் வாழ்வையே மாற்றிபோட வல்லமை படைத்தவை.. என் வாழ்வின் பல தருணங்களை நான் படித்த புத்தகங்களும் பார்த்த படங்களுமே தீர்மானித்துள்ளன. 

உதாரணமாக: குணா / தளபதி இரண்டு படங்களும் ஒரே நாளில் ஒரு தீபாவளிக்கு ரிலிஸ் ஆனது. சண்டை போட்டு  தளபதி படம் பார்த்தேன், ரொம்ப சந்தோசமாக உலகை வென்ற மிதப்பில் அடுத்தநாள் ஸ்கூல் சென்றேன். ரொம்ப காலம் கழித்து குணா பார்த்தேன், ஒரு டயலாக், "எலோரும் என்ன பைத்தியம்னு சொல்றாங்க" " யார் சொன்னா, வெளில இருக்கிறவங்க தான் பைத்தியம், ஒருவன் பெண் பைத்தியம், ஒருவன் பண  பைத்தியம்.." இந்த ஒரு டயலாக் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக அதிகம். 

தளபதி பார்க்க வேண்டியது தான், ஆனால் குணா ? 

இதெல்லாம் படிப்பதால்/ ரசிப்பதால் நான் ஒரு அறிவு ஜீவி என்று மார்தட்டிக் கொள்ளவில்லை, எனக்கு வாய்ப்பு கிடைத்தது இவற்றை ரசிக்க அவ்வளவே. 

(PS: இன்று இரவு சிங்கம் 2 தான் போறோம், Ship of Theseus பார்க்க வேண்டும்,... ஒரு நாள் ...)

Saturday, August 10, 2013

தலைவா !!!



தலைவா !!! Thalaivaa ? what a waste of such a beautiful title...


Sunday, May 09, 2010

சிங்கம் vs சுறா.....

 
A movie intended to be a Cow boy spoof has more message to tell than an intentional preachy flick. It also slashes your heart for your inability to support your fellow men dying else where. The smile on your face as a result of those funny one-liners is a mockery on yourself that you fail to realize as you leave the theater convincing yourself that it is after all a spoof movie. Chimbudevan slaps on our faces, the least he could do on the issue of Tamil ealem, to enlighten we the people.
While Sura, the stupidest movie ever, which boasts to deliver a message happens to be spoof of itself.
Lawrance who has a cleanest image in the cine field actually gains more of the intended image Vijay wished to gain by doing Sura.

Finally Singam outsmarts Sura in every way it can....

Wednesday, February 11, 2009

நான் கடவுள் - விமர்சனம்

கதை :
இருவரியில் ஒரு கதை :
" ஆஹம் ப்ஹ்ரமாஸ்மி " அதாவது " நான் கடவுள " என நம்பும் ஒரு இளம் அஹ்கொரி ஆகிய (http://en.wikipedia.org/wiki/Aghori) கதை நாயகன் "வாழ கூடதவர்களுக்கு நீ தரும் மரணம், சாபம் ; வாழ முடியாதவர்களுக்கு நீ தரும் மரணம், வரம்", என்று குரு போதித்ததை போல ஒரு துஷ்டனையும், ஒரு கஷ்டஜீவியையும் கொன்று விடுகிறான்.
இந்த கதையில் வித்யாசமாக இருப்பது: கதைநாயகன் ஒரு துஷ்டனை மட்டும் கொல்லாமல், ஒரு கஷ்டஜீவியையும் கொல்வது மட்டும் தான்
திரைக்கதைp :
நான்கே பக்கங்களில் திரைக்கதை அமைத்து வசனங்களாலும் , வசனம் இல்லாத கட்சிகளாலும் படத்தை நிரப்பி இருக்கிறார்கள்

இந்த கதைக்கு திரைக்கதை அமைப்பது ஒன்றும் கோடம்பாக்கத்திற்கு புதிதல்ல, ஆனால் இயக்குனர் பாலா அல்லவோ . அதனால் கதை நாயகன் ஒரு அகோரியாக சித்தரிக்கப்படுகிறான். அகோரி தமிழ் பேசவேண்டி அதற்கு ஒரு ஆழமில்லாத முன்கதை . ஜோஸியத்தை நம்பி மகனை குடும்பத்தை விட்டு பதினான்கு வருடங்கள் பிரித்து வைக்க காசியில் கொண்டுவிடுகிறார் தந்தை . ஆரண்யகாண்டம் முடிந்தவுடன் மகனை தேடி காசிக்கு வருகிறார். பார்த்தமாத்திரத்தில் மகனை அடையாளம் கண்டுகொள்வதாக காட்டுவதும், அடம் பண்ணாமல் அவன் தகப்பனுடன் ஊருக்கு வந்து சேர்வதும் என காட்சிகளை நீடித்து நோகடிக்காமல் இருப்பதால் நேரடியாக கதைக்குள் செல்லத்தான் போகிறார் என்று காத்திருந்தால் படம் அங்கேயே உட்கார்ந்துவிடுகிறது அரை சயனத்தில், கதை நாயகனை போலவே.



நல்ல இயக்குனர் என அறியபடுவதால் "ஊருக்கு ந்ல்லது சொல்வேன் "என கிளம்பிவிடுகிறார் பாலா, மற்றும் கதை நாயகனுக்கும் வேலை வேண்டுமே. பிச்சை எடுப்பதை தொழிலாக பிழைக்கும் ஒரு துஷ்டனையும் அவனது "உருப்படிகளாக" அறியப்படும் உடல் இயலாதவர்களும் அவர்களது தினப்படி வாழ்வுமாக முழுப்படத்தையும் இழுத்துச்செல்கிறார். அவப்போது பாலா பாணி நய்யாண்டி நகைச்சுவை வேறு. ந்யன்தாராவின் குத்துபாட்டு கூட உண்டு, நேரத்தை நிரப்ப. உடல் இயலாதவர்களை தேடிப்பிடித்து வாங்கி வந்து பிச்சைஎடுக்க வைக்கும் நிஜவாழ்வின் நிதர்சனங்களை இலைமறைக்காயாக, "வில்லன் , slumdog millionaire" உட்பட பல படங்களில் பார்த்திருந்தாலும், இப்படம் சரேலென முகத்தில் அறைகிறது, மனதிலும். "குறை ஒன்றும் இல்லை" என கடவுளுக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது. பாலாவின் வெற்றி இது ஒன்றுதான். ஆனால் தொடர்ந்து விதவிதமான உருபடிகளயே காட்டிக்கொண்டிருப்பதாலும், அவர்களே சந்தோசமாகத்தான் இருக்கிறார்கள் பின்ன என்ன என பரிதாபம் மாறி எரிச்சலாக மாறிவிடுகிறது பாலவின்மேல். தமிழில் வந்ததில் மிகச்சிறந்த "black comedy" என தராளமாக சொல்லலாம் தான் எனினும் கதை போக்கின் மனஓட்டத்தை சிதைத்து விடுகிறது.

சும்மா கஞ்சா அடித்துவிட்டு 'தன்னிலை உணர்ந்து' படுதுகொண்டிருபவன் கதை நாயகன் ஆக வேண்டாமோ. அதற்காக ஒரு கதை நாயகி.அந்த துஷ்டனின் மகளான கல்லூரி மாணவி கதாநாயகி , கதாநாயகனை காதலித்து , அதனால் ஏற்படும் மோதல்களில் கதாநாயகன் துஷ்டனை விழ்த்தி நாயகியை கைபிடித்திருந்தால் அது இயக்குனர் ஹரி படமாகிஇருக்கும். இது பாலா படம். இப்படிதான் படம் நெடுக நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார், நான் பாலா என்று .

அதனால் கதாநாயகி ஒரு குருட்டு பிச்சைகாரி. அவளை அவள் "முதலாளி" ஒரு கோர முகமுடைய, யாரும் பார்க்கவே பயப்படும் , ஆனால் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஒரு பணக்காரனுக்கு பத்து லட்ச்த்திற்கு விற்க முயல்கிறான் . மற்ற உருப்படிகளின் மேல் பரிதாபம் வரவழைக்க முயலும் பாலா இந்த கோரமாணவன் மேல் மட்டும் ஏன் வெறுப்பு வரும்படி செய்கிறார். அவன் பணக்காரன் என்பதாலா? நாசரின் "முகம்" திரைப்படம் ஏனோ ஞாபகம் வருகிறது. இந்த சூழலில், தப்பிபதற்காக கதை நாயகனிடம் தஞ்சம் புகுகிறாள் நாயகி. இவ்வளவு நேரமும் கஞ்சா அடித்துவிட்டு படுத்தே கிடக்கும் நாயகன் துஷ்டனை கொன்று, தின்று விடுகிறான். நல்லவேளை தின்பதை காண்பிக்கவில்லை. நன்றி பாலா, சிறிதளவேனும் பார்பவர்கள் மேலும் கரிசனம் காட்டியதால் . இது கதையின் முதல் வரியான "வாழகூடாதவர்களுக்கு மரணம் சாபம்" .

கொலையை விசாரிக்கும் போலீஸ் கூட அவனக்கு பயந்து அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என பின்வாங்குவதும் தான் யதார்த்தமா பாலா?
கதையின் இரண்டாவது வரியான "வாழஇயலதவர்களுக்கு மரணம் வரம்" என்பதற்கிணங்க துஷடர்களால் சீரழிக்கப்பட்ட நாயகிக்கு அவள் வேண்டுகோளுக்கினங்க மோட்சம் வழங்குகிறான் அகோரியாகிய நாயகன். "பருத்திவீரன்" போல.

அவளவுதான் படம்.

இந்த படத்தை விமர்சனம் செய்யும் போது இது நல்ல படமா , இல்லையா என்பதில் குழப்பமே வந்துவிடுகிறது படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் மனநிலை போல.

அகோரிகளின் வாழ்கைமுறையும், உடலியலாதவர்களின் வாழ்வியல் துன்பங்களையும் சந்தோஷங்களையும் கிட்டதட்ட யதார்த்தமாக பதிவு செய்த முதல் படம் என்பதை தவிர கதையிலோ திரைக்கதையிலோ எந்த புதுமையும் இல்லை.

கதைநாயகியையோ, நாயகனையோ கொல்வது , முரட்டு நாயகன், என வழக்கம் போலவும், நரமாமிசம் தின்னும் அகோரி, "வாழயலதவர்களுக்கு நீதரும் மரணம் வரம் " எனும் கதையின் oneline, விதவிதமான உடல் இயலாதவர்களை காட்டியது என்பதான தனக்கே உரிய புது பரிமான முயற்சிகளும் என்று "நான் பாலா " என காட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் மக்கள் பார்க்கவேண்டும் என்பதைவிட நான் பாலா என நிருபிபதையே செய்திருக்கிறார்.

ஆர்யா , பூஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் என்பதைவிட வாழ்ந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தண்டவனாக வருபவருக்கு OSCAR குடுத்தாலும் தகும். பாலா படத்தின் நடிகர்களின் நடிப்பை குறை சொல்ல எந்த ஆஸ்கார் நாயகனாலும் முடியாது. பூஜாவின் குரல் தான் காதில் "கொய்ங்" என கேட்கிறது.

பின்னணி இசை சிறப்பு, வேறென்ன சொல்ல. ஆனால் பூஜா பாடும் பாடல்கள் அவர் குரலுக்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. பாடல்களுக்கான வாதியங்களும் தேவைஇல்லாமல் ஒலிக்கிறது.


ஒளிப்பதிவு மிகச்சிறப்பு.


போலீஸ் நய்யாண்டி , நடிகைகளின் மேலான இளக்காரம், பணக்கார துவேஷம், கடவுள் மீதான ஆற்றாமை என வெகுஜன மன குருரங்களுக்கு தீனி போட்டு கை தட்டல் வாங்குகிறார் வசனகர்த்தா.
யதார்த்த வசனங்கள் தான் எனினும், censor இல் mute பண்ணியும், " புளுத்துனான் தேவிடியா பையன்" என கடவுளை திட்டும் வசனம்மும் , "தும்மைணா என்னனு தெரியுமா "என்று தாயிடமே கேட்பதும் எப்படி U/A certificate உடன் தப்பி வந்தது என தெரியவில்லை.

அடுத்த படத்திற்கான கருவை இதிலே கோடிட்டு காட்டிவிடுகிறார். "ஜெயம் ரவி -ஐ வைத்து திருநங்கைகளின் வாழ்வியலை படம் பிடித்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

செய்யங்கள் பாலா உங்களை விட்டால் அதைச்செய்ய ஒருவனுக்கும் தைரியம் இல்லை கோடம்பாக்கத்தில்.

கடைசியாக உலகத்தரம் வாய்ந்த நல்ல படம் என்றோ , நல்ல entertainer என்றோ கூறமுடியவிட்டாலும் யாரும் கண்டுகொள்ளாத ஒரு வாழ்வியலின் சமகால பதிவாக நிச்சயம் ஒரு உன்னத படைப்பை தந்து, "நான் பாலா" என நிருபித்து இருக்கிறார்.

"A TRULY DEPRESSING MOVIE. BUT A GREAT DOCUMENTARY."